Last Updated : 23 May, 2015 11:00 AM

 

Published : 23 May 2015 11:00 AM
Last Updated : 23 May 2015 11:00 AM

சவுதி அரேபியாவில் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

சவுதி அரேபியாவில் அல்-குவாதிப் நகரில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சவுதி அரேபியாவின் குவாதிப் மகாணம் அல்-குவாதிப் நகரில் இமாம் அலி மசூதி உள்ளது. இங்கு நேற்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதி மசூதியில் வெடித்துச் சிதறினான்.

இதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சவுதி அரேபியாவில் சன்னி முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் அல்-குவாதிப் நகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்களை குறிவைத்து சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x