Published : 23 May 2015 11:03 AM
Last Updated : 23 May 2015 11:03 AM

ஐஎஸ் அமைப்புக்கு எதிரான எங்கள் போர் தோல்வியடையவில்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான எங்கள் போர் தோல்வியடைய வில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்காவின் 'தி அட்லான் டிக்' இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

இராக்கில் ரமாதியை ஐஎஸ் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இது எங்களுக்கு உத்திப்பூர்வமான பின்னடைவுதான். இதற்குக் காரணம் இராக் ராணுவத்தின ருக்கு முறையான பயிற்சி இல்லா ததுதான். மேலும் ஐஎஸ் அமைப்பை எதிர்த்துப் போரிடுவதில் அந் நாட்டில் உள்ள சன்னி பிரிவு மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டு வதில்லை. எங்களின் பின்னடை வுகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதோடு, சன்னி பிரிவு மக்க ளையும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் அதிகளவு ஈடுபடுத்த உள்ளோம். எனவே, எங்களின் போராட்டம் தோல்வி யடையவில்லை.

தொடக்கத்தில் இராக்கில் உள்ள‌ ஷியா பிரிவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வந்ததைக் கண்டு நாங்கள் கவலையடைந்தோம். ஆனால் ஈரானுடன் அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டால் அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் கை ஓங்கும் என்று சவுதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் சந்தேகப்படன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x