Published : 20 Sep 2015 11:51 AM
Last Updated : 20 Sep 2015 11:51 AM
சவுதி அரேபியாவின் ஜிஜான் பகுதியில் உள்ள சாம்டா மருத்துவமனை மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் அதிகாலை பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் கேரளத்தைச் சேர்ந்த ஃபரூக் என்ற மெக்கானிக் உயிரிழந்தார். மேலும் கேரளத்தைச் சேர்ந்த சன்னி தாமஸ், பிஹாரைச் சேர்ந்த முகம்மது சாதிக் ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.
காயமடைந்த இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. ஏமனில் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தாக்குதல் நடத்துவதால், அதற்கு பதிலடி தரும் வகையில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் இத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT