Last Updated : 05 Dec, 2015 12:55 PM

 

Published : 05 Dec 2015 12:55 PM
Last Updated : 05 Dec 2015 12:55 PM

எகிப்து கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் சுட்டதில் 16 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் செயல்படும் கேளிக்கை விடுதியில் நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கி யால் சுட்டதில் 16 பேர் உயிரிழந்தனர்.

கெய்ரோவின் தாஹிர் சதுக்கத் தில் உணவகத்துடன் கூடிய கேளிக்கை விடுதி செயல்படுகிறது. அங்கு நேற்று மோட்டார் சைக்கிள் களில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் விடுதியை குறிவைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிர மாக நடைபெறுகிறது.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x