Last Updated : 30 Dec, 2016 04:24 PM

 

Published : 30 Dec 2016 04:24 PM
Last Updated : 30 Dec 2016 04:24 PM

உலகின் மிக உயரமான போக்குவரத்து பாலம்: சீனா திறப்பு

சீனாவின் இரு மலைப்பிரதேச மாகாணங்களை இணைக்கும் உலகின் மிக உயரமான பாலம் ஒன்றை போக்குவரத்துக்காக வியாழனன்று திறக்கப்பட்டது.

இதனால் 4 மணிநேரம் எடுக்கும் பயணம் 1 மணி நேரமாக குறையும். நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பெய்பஞ்சியாங் பாலம் 565 மீட்டர்கள், அதாவது 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

யுனான் மாகாணத்தின் ஸுனாவேய் மற்றும் குயுஸூ மாகாணத்தின் ஷுய்செங் மலைப்பகுதிகளை இந்தப் பாலம் இணைக்கிறது, இதுவரை 4 மணி நேரம் எடுக்கும் பயணம் உலகின் உயரமான இந்த பாலத்தின் மூலம் ஒரு மணி நேரமாக குறையும் என்று லாரி ஓட்டுநர் கூறியுள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அதிசய பாலம் ஒரு பில்லியன் யுவான் (144 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவில் கட்டப்பட்டுள்ளது. ஹுபேயில் கட்டப்பட்ட ஸீ டு நதியின் மீது கட்டப்பட்ட பாலத்தை விடவும் இது உயரமானது என்பதால் உலகின் மிக உயரமான பாலம் இதுவே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x