Last Updated : 20 Sep, 2015 12:14 PM

 

Published : 20 Sep 2015 12:14 PM
Last Updated : 20 Sep 2015 12:14 PM

ஈரானில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

ஈரானில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

ஈரானில் கனமழை காரணமாக 10 மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் டெஹ்ரானுக்கு தென்கிழக்கில் உள்ள பக்தஸ்த் நகரில் நேற்று முன்தினம் ஓர் ஆற்றின் கரையில் நடந்துசென்ற சிலரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 6 பேர் இறந்தனர்.

இதுபோல் ஈரானின் தெற்கில் உள்ள ஹார்மோஸ்கான் நகரில் நேற்று முன்தினம் ஓர் ஆற்றில் வெள்ளப் பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். இதனால் ஆறுகளின் அருகே மக்கள் செல்லவேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x