Last Updated : 05 Jan, 2017 10:10 AM

 

Published : 05 Jan 2017 10:10 AM
Last Updated : 05 Jan 2017 10:10 AM

இலங்கை ராணுவத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் கடந்த 2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் சரண் அடைந் தவர்கள் பட்டியலை வரும் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய ராணு வத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் பலரை காணவில்லை என்று நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கில் முந்தைய விசாரணையின்போது, தங்களிடம் சரண் அடைந்தவர்கள் பட்டியல் இருப்பதாக ராணுவத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பட்டியலில் அரசு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் பெயர்களே உள்ளன. காணாமல் போனதாக கூறப்படுவோர் பெயர்கள் இல்லை என்று வழக்கறிஞர் கே.எஸ்.ரத்தினவேல் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x