Published : 07 Dec 2016 11:50 AM
Last Updated : 07 Dec 2016 11:50 AM
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 97 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சுமத்ரா தீவு பகுதியில் கடலுக் கடியில் நேற்று அதிகாலை 5.03 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏஸ் மாகாணத்தில் உள்ள ரியூலெட் நகருக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் 17 கி.மீ. ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்கள் கட்டிடங் களிலிருந்து வெளியேறி வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள், வர்த்தக வளாகங்கள், மசூதிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட கட்டிடங் கள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் பல சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் சாரம், தொலைத்தொடர்பு சேவை கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக கட்டிட இடிபாடு களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி பொதுமக்கள், போலீஸார், ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை யினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்த மாகா ணத்தில் உள்ள ராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் ததாங் சுலைமான் நேற்று கூறும்போது, “இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகில் உள்ள பிடி ஜயா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 97 பேரின் சடலங்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள் ளன. மேலும் நூற்றுக்கும் மேற் பட்டோர் காயங்களுடன் மீட்கப் பட்டு மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி உலகையே உலுக்கும் வகையில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கம், அதையடுத்து ஏற்பட்ட சுனாமிக்கு 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2.3 லட்சம் பேர் பலியாயினர். இதில் ஏஸ் மாகாணத்தில் மட்டும் 1 லட்சத் துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். அதன்பிறகு இங்கு ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இது ஆகும்.
இதனிடையே, மீட்புப் பணியை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக தீவுக் கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா, அடிக்கடி நில நடுக்கம் ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதியாக விளங்குகிறது. இங்கு எரிமலைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT