Published : 16 Sep 2016 10:10 AM
Last Updated : 16 Sep 2016 10:10 AM
இந்திய வம்சாவளி மருத்துவர்-எழுத்தாளர் ஆப்ரஹாம் வர்கீஸுக்கு 2015-ம் ஆண்டுக்கான தேசிய மனிதநேய பதக்கத்தை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வரும் 21-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வர்கீஸ் மற்றும் 11 பேருக்கு இவ்விருதை வழங்குவார்.
மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக வர்கீஸுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரஹாம்வர்கீஸ் (61), தற்போது ஸ்டான்ட் போர்டு மருத் துவக் கல்லூரியில் பேராசிரியராக வும் மருந்துகள் துறையின் துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் தனது மருத்துவக் கல்வியை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.
“நோயாளிகள்தான் மருத்துவ உலகின் மையம் என்பதை வர்கீஸ் நமக்கு நினைவுபடுத்தியுள்ளார்” என வெள்ளைமாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய மனிதநேய பதக்கம் வரலாறு, இலக்கியம், மொழி, தத்துவம், இதர மனிதநேய பணிகளில் ஈடுபடும் தனிமனிதர்கள், குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT