Published : 28 Jun 2016 09:59 AM
Last Updated : 28 Jun 2016 09:59 AM
‘இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கு, எல்லைப் பிரச்சினையும், புதிதாக உருவாகும் சில விவகாரங்களும் மிகப்பெரிய சவாலாக உள்ளன’ என்று சீன வெளியுறவு துணை அமைச்சர் லி ஹுய்லாய் குறிப்பிட்டார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத் துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியா, சீனா இடையிலான உறவுகள் மேம்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எல்லைப் பிரச்சினை மற்றும் புதிதாக உருவாகும் சில விவகாரங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இவற்றை எப்படி கையாளுவது என்பதுதான் தற் போது இரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது’ என்றார்.
அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து சீன அமைச்சர் லியிடம் கேட்டபோது,
‘அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அனைத்து நாடுகள் விஷயத் திலும் சீனா பொதுவான நிலைப் பாட்டையே கொண்டுள்ளது. எந்த வொரு நாட்டையும் தனிப்பட்ட முறையில் இலக்காக வைத்து நாங்கள் செயல்படுவதில்லை. அதோடு, என்எஸ்ஜி கூட்டமைப் பிலேயே சீனாவின் அதே நிலைப் பாட்டைக் கொண்டிருக்கும் நாடுகளும் உள்ளன.
இவ்விஷயத்தில் என்எஸ்ஜி உறுப்பினர் நாடுகள் மத்தி யிலேயே வேறுபட்ட கருத்து நிலவுகிறது. எனவே, மீண்டும் கூடி விரிவாக விவாதித்து, அதன் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT