Published : 20 Sep 2015 12:28 PM
Last Updated : 20 Sep 2015 12:28 PM
போப் பிரான்சிஸ் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் பதவி யேற்ற பிறகு, எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் கியூபாவும் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தார். அதற்கு பலனும் கிடைந்தது.
இந்நிலையில் 10 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு போப் சென்றுள்ளார்.
ஏழைகளின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வரும் போப் பிரான்சிஸ், அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடைமுறைகளை விமர்சித்துள்ளார். எனவே கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் க்யூபாவின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மதிப்புகுரியவ ராக உள்ளார். எனினும் அமெரிக்கா தொடர்பான விமர்சனம் காரணமாக அந்நாட்டில் போப் மீது சிறிது அதிருப்தி உள்ளது.
இதனிடையே நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூப அதிபர் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கியூபா மீது பொருளாதாரத் தடையை தளர்த்துவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்க வுள்ளதாக அறிவித்த பிறகு இரு தலைவர்களும் முதல்முறையாக பேசியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT