Published : 11 Jul 2019 01:33 PM
Last Updated : 11 Jul 2019 01:33 PM

வேலூர் தேர்தல்: அதிமுக கூட்டணி சார்பில் மீண்டும் ஏ.சி.சண்முகம் மனு தாக்கல்

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட, அதிமுக கூட்டணி சார்பில் மீண்டும் ஏ.சி.சண்முகம் இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதனால், மக்களவைத் தேர்தலின்போது, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே வேலூர் தொகுதிக்கு மீண்டும் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது. திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. இதனையொட்டி அதிமுக கூட்டணி வேட்பாளராக, வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கூட்டணிக் கட்சியினர் மனு தாக்கல் செய்யும்போது உடனிருந்தனர். அதேபோல காந்தி போல வேடமிட்ட சுயேச்சையும் பின்னோக்கி நடந்து வந்த சுயேச்சையும் இன்று மனு தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x