Published : 21 Jun 2019 02:40 PM
Last Updated : 21 Jun 2019 02:40 PM
தூய்மை இந்தியா திட்டத்தைப்போல் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தையும் ஓர் இயக்கமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் இன்று(வெள்ளிக்கிழமை) அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்கும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அகூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், தூய்மை இந்தியா திட்டத்தைப் போல மழைநீர் சேகரிப்புத் திட்டத்தையும் ஓர் இயக்கமாக அறிவித்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதவிர, கிருஷ்ணா-கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வரும் பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கி செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க சிறப்பு திட்டத்தை அமல்படுத்தும் வகையில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் 2019-ஐ ஒட்டி கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டது. அதனால், தற்போது முழுமையான பட்ஜெட் தாக்கலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை முன்னிட்டே இந்த ஆலோசனைக் கூட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT