Published : 17 Jun 2019 07:57 PM
Last Updated : 17 Jun 2019 07:57 PM
போலீஸாரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி வல்லரசு வழக்கில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீஸாரை வெட்டியதாக ரவுடி வல்லரசு (19) என்பவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். போலீஸாரை வெட்டிய வல்லரசுவை தேடிச் சென்றபோது இரண்டு உதவி ஆய்வாளர்களை வெட்ட முயன்ற வல்லரசுவை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் சுட்டுக்கொன்றார்.
உயிரிழந்த வல்லரசு மீது ஓரிரு வழிப்பறி வழக்குகள் மட்டுமே இருந்த நிலையில், சமீப்த்தில் எந்த விவகாரத்திலும் ஈடுபடாமல் இருந்த அவரை போலீஸார் தேவையில்லாமல் சுட்டுக்கொன்று விட்டதாகவும், அதுகுறித்து வழக்கு தொடர உள்ளதாகவும் வல்லரசுவின் தந்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் வல்லரசு என்கவுன்ட்டர் விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
என்கவுன்ட்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க தமிழக பொதுத்துறை செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT