Published : 11 Jun 2019 12:20 PM
Last Updated : 11 Jun 2019 12:20 PM
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என்று திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கருணாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ''இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்தலுக்கான தோல்வியாக எதைப் பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ''நான் ஆரம்பத்தில் இருந்தே இதைச் சொல்லி வருகிறேன். பாஜகவுடன் கூட்டு வைப்பதற்குப் பதிலாக சாகலாம் என்று சொன்னேன். பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் வைத்த தவறான கூட்டணிதான் இந்தத் தோல்விக்குக் காரணம். மக்கள் அதை ஓட்டுகளின் வாயிலாகக் காட்டி விட்டார்கள்.
பாஜகவில் அமைச்சர் பதவி வழங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவரை இருந்த அமைச்சர்கள் என்ன செய்துவிட்டார்கள்? கடந்த 5 ஆண்டுகளில் இணை அமைச்சர், பொது அமைச்சர் என்று கொடுத்தார்கள், ஆனால் அந்த அமைச்சர்கள் என்ன செய்தார்கள்?
அமைச்சர் பதவியை வெறுமனே வாங்கி வைத்துவிட்டு, டம்மியாக இருப்பதில் என்ன பயன்? நான்கூடத்தான் எம்எல்ஏ. நான் டம்மியாகத்தானே இருக்கிறேன். என்னால் என்ன செய்ய முடிகிறது?
ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தனது தொகுதியிலேயே எதுவும் செய்யமுடியவில்லை. இதுவே ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்குமா?'' என்றார் கருணாஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT