Last Updated : 04 Jun, 2019 05:48 PM

 

Published : 04 Jun 2019 05:48 PM
Last Updated : 04 Jun 2019 05:48 PM

சொத்து தர மறுத்த கணவரை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி, மகள் கைது: துப்பு துலக்கிய சிசிடிவி கேமரா

சொத்து தர மறுத்ததால் கூலிப்படையை ஏவி, கண வரைக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை தத்னேரியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (55). பைனான்சியரான இவரது மனைவி இறந்துவிட்டார். ஏற்கெனவே திருமணம் ஆன கோச்சடையைச் சேர்ந்த அபிராமி (35) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தார். அவருக்கு ஏற்கெனவே அனுஷ்யா(19) என்ற மகள் உள்ளார்.

அலங்காநல்லூர் நடராஜ் நகரில் இளங்கோவன்  2-வது மனைவியுடன் வசித்து வந்தார். 3 நாளுக்கு முன், 6 பேர் கொண்ட கும்பல், இளங்கோவனின் வீட்டு வாசல் அருகில் வைத்து அவரை வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பியது.  

இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸார் விசாரித்தனர். இளங்கோவின் வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். கொலையாளிகள் 6 பேர் முகமுடி அணிந்து வந்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடினர். இதற்கிடையில் பெரிய ஊர்சேரியைச் சேர்ந்த அபிராமி, அவரது மகள் அனுஷியா (19) ஆகியோர் விஏஓ காளி ராஜிடம் சரண் அடைந்தனர். இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீஸார் கூறியது:

இளங்கோவனுக்கு சொந்தமான சில சொத்துகளை அபிராமி எழுதிக் கேட்டுள்ளார். அவர் தர மறுத்து இருக்கிறார். சமீபத்தில் வாங்கிய நிலம் ஒன்றையும் இளங்கோவன் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்தார். மேலும், அனுஷ்யாவுக்கு பாலியல் ரீதியாக இளங்கோவன் சொந்தரவு கொடுத்துள்ளார். இது அபிராமிக்கு கணவர் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஆத்திரம் அடைந்த அபிராமி இளங்கோவனைக் கொலை செய்ய முடிவெடுத்தார். ஏற்கெனவே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் இளங்கோவனை கூலிப்படை மூலம் கொலை செய்து, அபிராமி நாடகமாடியது தெரிந்தது, என்றனர்.

இதைத்தொடர்ந்து அபிராமி, அவரது மகள் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினரை போலீஸார் தேடுகின்றனர்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x