Published : 04 Jun 2019 02:03 PM
Last Updated : 04 Jun 2019 02:03 PM
மதுரை ஆட்சியர் உட்பட மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவு:
''மதுரை ஆட்சியராகப் பணியாற்றிய நாகராஜன் தொழில் முனைப்பு வளர்ச்சி நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வந்த எம். பாலாஜி மாற்றப்பட்டு பொதுப்பணித்துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த வி. ராஜாராமன் மாற்றப்பட்டு டவுன் பஞ்சாயத்து திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரைக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்படும் வரை மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆட்சியருக்கான கூடுதல் பணியையும் கவனிப்பார்''.
இவ்வாறு கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT