Last Updated : 24 May, 2019 12:00 AM

 

Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM

குமரியில் வென்ற காங்கிரஸ், மத்தியில் வென்ற பாஜக: மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வென்ற காங்கிரஸாரும், மத்தியில் வென்ற பாஜகவினரும் நாகர்கோவிலில் நேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் சோகத்துடன் காணப்பட்டனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றார். அதிகாலையிலேயே கோணம் வாக்கு எண்ணும் மையம் அருகே காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் திரண்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே வசந்தகுமார் முன்னணியில் இருந்தார்.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்ற நிலையில், அதை மனப்பூர்வமாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் தவித்தனர். மத்தியில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் வெற்றி பெற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதே என காங்கிரஸார் புலம்பியதைக் காணமுடிந்தது. பெயரளவுக்கே வெற்றியைக் கொண்டாடினர்.

இதுபோலவே, பாஜகவினரும் மத்தியில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததால் சோகத்துடன் காணப்பட்டனர். இதனால், குமரியைப் பொறுத்தவரை நேற்று பாஜகவினரும், காங்கிரஸாரும் வெற்றிக் கொண்டாட்டங்களை தவிர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x