Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM

நிலக்கோட்டை தனது கோட்டை என மீண்டும் நிரூபித்தது அதிமுக

நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத்தேர்தலில், அதிமுக வெற்றி பெற்று, நிலக்கோட்டை தங்களின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தேன்மொழி, திமுக சார்பில் சவுந்திரபாண்டியன், அமமுக சார்பில் தங்கத்துரை, நாம் தமிழர் சார்பில் சங்கிலிபாண்டியன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னத்துரை உட்பட 20 பேர் போட்டியிட்டனர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக் கியது.

ஆனால் அக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியாற்றாமல், நிலக்கோட்டை தொகுதியில் முகாமிட்டு அதிமுக வெற்றிக்கு முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பெரும்பாலோனோர் தேர் தல் பணியாற்றினர்.

எப்படியும் தங்களது கோட் டையான நிலக்கோட்டையை தக்க வைக்க வேண்டும் என உழைத்தனர். இதன் விளைவு அதிமுக 20 ஆயிரத்துக்கும் அதிக மான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கடைசியாக வெற்றி பெற்றது.

இதன் பின் நிலக்கோட்டையில் திமுக வெற்றி பெற்றேதே இல்லை. இந்நிலை திமுகவுக்கு இடைத்தேர்தல் வரை தொடர்ந் துள்ளது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மகிழ்ச்சியடைந்த திமுகவினர் நிலக்கோட்டை இடைத்தேர்தல் தோல்வியால் சற்று துவண்டு போயுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x