Published : 23 May 2019 10:29 AM
Last Updated : 23 May 2019 10:29 AM
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எச்.வசந்தகுமார் முன்னிலை வகிக்கிறார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
குமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில், எச்.வசந்தகுமார் சுமார் 38,130 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன்14,487 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். சுமார் 23,643 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் எச்.வசந்தகுமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT