Published : 22 May 2019 12:27 PM
Last Updated : 22 May 2019 12:27 PM
தேமுதிக மத்திய அமைச்சரவையில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார்.
பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் செவ்வாய்க்கிழமை விருந்து அளித்தார்.
இதில் கலந்துகொண்ட பின் இன்று (புதன்கிழமை) கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
தேமுதிக மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேசப்பட்டதா?
அதுகுறித்துப் பேசவில்லை. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும். முடிவுகள் வந்த பின்னர் கட்சித் தலைவரும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்தாலோசித்து அதுகுறித்து முடிவெடுப்பர்.
கருத்துக் கணிப்புகள் அதிமுகவுக்கு பாதகமாக வந்துள்ளதே?
கடந்த தேர்தலிலேயே கருத்துக் கணிப்புகளைப் பார்த்திருப்போம். அதிமுக அனைத்து இடங்களிலும் தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. ஆனால், அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று அதிமுக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறது.
மீண்டும் தமிழகத்தில் நடைபெற்றுள்ள 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெறும். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 39 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். வெற்றி பெற்று மோடியின் ஆட்சியில் நாங்கள் இடம்பெறுவோம்.
இவ்வாறு எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT