Published : 15 May 2019 08:22 PM
Last Updated : 15 May 2019 08:22 PM
நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத போதும் விருகம்பாக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது சட்ட விரோதம் எனவே அந்த வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் வழக்குதான் தொடர முடியும் எனவும் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று பதில்மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே.17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT