Published : 15 May 2019 08:04 PM
Last Updated : 15 May 2019 08:04 PM
பாஜகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை பேசி வருகிறது என்பது வடிகட்டின பொய் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தீவிரவாதம் என்பது ஒரு மதத்தைச் சேர்ந்தது அல்ல. எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர். கமல் கோட்சே குறித்து எந்த நோக்கத்தில் பேசினார் என்று தெரியவில்லை.
பாஜகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்று தமிழிசைக் கூறியிருப்பது வடிகட்டிய பொய் . ஸ்டாலின் இந்தியாவில் எந்தத் தலைவரும் சொல்வதற்கு முன்பாக ராகுல் காந்திதான் பிரதமர் என்று பகிரங்கமாக பலரது முன்னிலையில் அறிவித்தார். ராகுல் காந்தியை இந்த நாட்டின் பிரதமர் என்று தான் பிரகடனப்படுத்துகிறேன் என்றார் ஸ்டாலின்.
அவர் எப்படி பாஜகவுடன் பேச முடியும். இது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.
இவ்வாறு கூறினார் நாராயணசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT