Published : 07 Apr 2019 05:17 PM
Last Updated : 07 Apr 2019 05:17 PM

கையெடுத்துக் கும்பிட்ட பெண்ணின் கன்னத்தில் அறைந்த காவல் அதிகாரி: தேனியில் சர்ச்சை

கையெடுத்துக் கும்பிட்ட பெண்ணைக் கன்னத்தில் அறைந்த தேனி காவல் நிலைய சிறப்பு சார்பாய்வாளர் முருகேசனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேரு சிலை அருகே நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் வேகமாகச் செல்ல முடியாமல் சாலையில் ஊர்ந்து சென்றன.

அங்கு பாதுகாப்புப் பணிக்காக சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது ஷேர் ஆட்டோ போன்ற வாகனம் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தை வேகமாக ஓட்டுமாறு டிரைவரிடம் சிறப்பு சார்பு ஆய்வாளர் கூறினார்.

அப்போது உள்ளே இருந்த பெண், சார்பு ஆய்வாளர் முருகேசனின் தோள்பட்டைக் கயிறைப் பிடித்து இழுத்தார். முருகேசன் திரும்பியவுடன் அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது எதிர்பாராத விதமாகக் கும்பிட்ட பெண்ணின் கன்னத்தில் பளாரென அறைந்தார் முருகேசன். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x