Published : 06 Apr 2019 01:02 PM
Last Updated : 06 Apr 2019 01:02 PM
யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கேரளாவைச் சேர்ந்த பழங்குடிப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதற்காக கேரள அரசுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் முதல் முறையாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். 22 வயதான ஸ்ரீதன்யா சுரேஷ், இந்திய அளவில் 410-வது இடத்தைப் பிடித்துள்ளார். வயநாட்டைச் சேர்ந்த ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
ஸ்ரீதன்யாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற வயநாட்டின் குரிச்சியா பழங்குடியைச் சேர்ந்த முதல் பெண் ஸ்ரீதன்யா சுரேஷுக்கு வாழ்த்துகள். இப்படியான பழங்குடி இனமக்களின் வளர்ச்சிக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்த கேரள அரசாங்கத்துக்குப் பாராட்டுகள்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT