Published : 23 Mar 2019 08:27 AM
Last Updated : 23 Mar 2019 08:27 AM
மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தில் முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் 2 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி. அன்வர்ராஜா தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலை வராக இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற பிறகு மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப் பப்பட்டன.
இப்பணியிடங்கள் முறை கேடாக நிரப்பப்பட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த சர்தார் உசேன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அன்வர்ராஜாவிடம் ஏற் கெனவே பலமுறை விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் ராமநாதபுரத்தில் உள்ள அன்வர்ராஜா வீட்டில் மதுரையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரி கார்த்திகைசாமி தலைமையில் ஆய்வாளர் வேலாயுதம் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின் சில ஆவ ணங்களில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் கையெழுத்துப் பெற்றனர். மேலும் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். மேலும் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT