Published : 23 Mar 2019 08:21 AM
Last Updated : 23 Mar 2019 08:21 AM
சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜென ரல் எஸ்.பாலசந்திரன் கூறிய தாவது:
தமிழகத்தின் உள் மாவட் டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ண கிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகியவற்றில் அடுத்த சில தினங்களில் வழக்கத்தை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். மேலும் அப்பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகமாகி, வெப்பநிலையும் அதிகரிப்பதன் காரணமாக உடலில் இருந்து வெளியேறும் வியர்வையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 102 டிகிரி, தருமபுரி, சேலம், திருத்தணி, வேலூர் ஆகிய பகுதிகளில் தலா 101 டிகிரி, திருச்சி மற்றும் மதுரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT