Published : 21 Mar 2019 06:48 AM
Last Updated : 21 Mar 2019 06:48 AM
நாகர்கோவில் அருகே பாரா மெடிக் கல் கல்லூரியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக் கல்லூரி நிறுவனர் மற்றும் கல்லூரி யின் பெண் இணை இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தில் ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 80 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் உட்பட 10 பணியாளர்கள் உள்ளனர். கல்லூரி யின் நிறுவனர் ரவி (35). இவர் 2 பெண் ஊழியர்களின் துணை யோடு, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக புகார் எழுந்தது.
ஆசிரியை அதிர்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரவியின் அறையில் இருந்து ஆசிரியை ஒருவர் அழுது கொண்டே வெளியே வந்ததாக வும், சக ஆசிரியைகளும், மாணவிகளும் அவரிடம் என்ன வென்று விசாரித்ததாகவும் கூறப் படுகிறது. இந்த விவகாரம் வெளியே பரவியது. பெற்றோரின் துணையோடு பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு நேற்று வந்த அந்த ஆசிரியை, தன்னை பாலியல்ரீதியில் ரவி துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை
இதுதொடர்பாக, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம், போலீஸ் ஏஎஸ்பி ஜவகர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அத்துடன், இக்கல்லூரியில் வேலை பார்த்த ஆசிரியைகள் பலர், பாலியல் தொல்லை காரணமாக வேலையை விட்டுச் சென்றுவிட்டதாகவும், கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் கேமராக்கள் பொருத்தி மாணவிகள் கண்காணிக்கப்பட்டதாகவும், விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் நடவடிக்கை
இதையடுத்து, கல்லூரி நிர்வாகி ரவி மற்றும் அவருக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி(30), கலா(28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT