Last Updated : 17 Mar, 2019 07:06 AM

 

Published : 17 Mar 2019 07:06 AM
Last Updated : 17 Mar 2019 07:06 AM

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் உறவினர்களை சந்தித்து மகிழ்ந்த இருநாட்டு தமிழர்கள்

1913-ம் ஆண்டில் ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப் பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள கச்சத் தீவில் சிறிய ஓலைக்குடிசையில் அந்தோணியார் ஆலயத்தை நிறுவினர். அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்தியா–இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் இந்த திருவிழா நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தொடங்கியது. இவ்விழாவை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், சனிக்கிழமை காலை சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது. தமிழில் திருப்பலியை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் அந்தோணியார் நடத்தினார். பின்னர் காலை 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் கச்சத் தீவு விழா முடிவடைந்தது. இந்த விழாவில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 7 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட பக்தர்கள் இலங்கையில் உள்ள தங்களின் உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x