Published : 14 Mar 2019 12:03 PM
Last Updated : 14 Mar 2019 12:03 PM

ராகுலும், ஸ்டாலினும் போட்டி போட்டு புகழாரம்

கன்னியாகுமரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ராகுல்காந்தி தனது பேச்சின் தொடக்கத்தில், "தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்” என்று தெரிவித்தார். அப்போது கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதுபோல், மு.க.ஸ்டாலின் பேசும்போது, "சில வாரங்களில் நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி பதவியேற்பார். அதன்பின், அவரது கரங்களில் இந்தியா பாதுகாப்பாக, ஆரோக்கியமானதாக, மதச்சார்பற்றதாக இருக்கும்" என்றார். அப்போதும், ஆரவாரம் எழுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x