Published : 14 Mar 2019 09:34 AM
Last Updated : 14 Mar 2019 09:34 AM

பொள்ளாச்சி விவகாரம்: கடைபிடிப்போம் ஊடகப் பொறுப்புணர்வை! 

தமிழகம் கடந்தும் மனித நெஞ்சங்களை பதைபதைக்க வைத்திருக்கும் பாலியல் கொடுமை அரங்கேறியிருக்கிறது.

அதுதொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் நமது நிருபர்கள் கொண்டுவந்து சேர்த்த தகவல்களில் மனம் கலங்கச் செய்த தகவல் - 'பாதிப்புக்கு உள்ளான பெண்களும் அவர்களின் உறவினர்களும் தங்களைப் பற்றிய அடையாளங்களும் வீடியோ உள்ளிட்ட வெவ்வேறு வடிவங்களில் வெளியாவதன் மூலம், வாழ்நாள் முழுமைக்குமான அவமானத்தில் சிக்கி விடுவோமோ என்ற கலக்கத்தில் தினம் தினம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்பதுதான்.

‘பரபரப்புச் செய்தி என்ற பெயரில் அப்படியொரு பாதிப்பு யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் ‘இந்து தமிழ்' நாளிதழ் எப்போதுமே பொறுப்புணர்வுடன் செயல்படும். இப்போதும் அப்படியே இந்த பாலியல் கொடுமை தொடர்பான காட்சி மற்றும் ஆதாரங்கள் எது கிடைத்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் படங்கள், குடும்பங்களில் பாதிப்பு ஏற்படுத்துவது மாதிரியான தகவல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, அடையாளங்களையும் மறைத்தே வெளியிடுவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x