Published : 25 Feb 2019 07:07 AM
Last Updated : 25 Feb 2019 07:07 AM
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிக்க டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் முடிவு செய்துள்ளது. சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமையை சேதுராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் 52-வது மாநில செயற்குழுக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் தலைமை வகித்தார். இதில் பொதுச் செயலர் எஸ்.ஆர்.தேவர், பொருளாளர் வி.டி.பாண்டியன் மற்றும் 150 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செயற்குழுவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக தேசத்தின் வளர்ச்சிக்காக மோடி பிரதமராகத் தொடர வேண்டும். எனவே மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியுடன் இணைந்து செயலாற்ற அஇமூமுக முடிவு செய்துள்ளது. இக்கூட்டணியில் சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை அஇமூமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT