Published : 25 Feb 2019 07:00 AM
Last Updated : 25 Feb 2019 07:00 AM

பாகிஸ்தானுக்கு பதிலடி: அன்வர் ராஜா வலியுறுத்தல்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரி விவசாயி ஆதரவு நிதி வழங்கும் திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்ற அ.அன்வர் ராஜா எம்.பி. செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

பாஜகவுடன் கொள்கை ரீதியாக கூட்டணி வைக்கவில்லை. தேர்தலில் வெற்றிபெறவே அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

திமுக, காங்கிரசுடன் சேர்ந்து 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுகவை தோற்கடித்து, ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார் கள். அதனால், நாங்கள் அதிமுக ஆட்சியை தக்க வைக்கவே பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகல் ஆபரேஷன் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x