Published : 18 Feb 2019 01:07 PM
Last Updated : 18 Feb 2019 01:07 PM

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? - கமல்ஹாசன் கேள்வி

இந்திய அரசு காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஆதில் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினார். இதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தீவிரவாதத் தாக்குதலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "ஏன் வீரர்கள் உயிரிழக்க வேண்டும்? நம் நாட்டின் பாதுகாவலர்கள் ஏன் இறக்க வேண்டும்? இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகள் ஒழுங்காக நடந்துகொண்டால் எந்த வீரரும் உயிரிழக்க வேண்டிய அவசியமில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி கட்டுப்பாடுடன் இருக்கும்.

ஏன் இந்திய அரசு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? எதற்காக இந்திய அரசு பயப்படுகிறது?" என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x