Last Updated : 17 Feb, 2019 11:03 AM

 

Published : 17 Feb 2019 11:03 AM
Last Updated : 17 Feb 2019 11:03 AM

‘யாருக்கும் ஆதரவு இல்லை; தேர்தலிலும் நிற்கவில்லை!’ - ரஜினி அறிவிப்பு

வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை. எனது பெயரை, கட்சிக் கொடியை, புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரசிகர்களின் முன்னிலையில், ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று அறிவித்தார் ரஜினி. மேலும் ‘பாராளுமன்றத் தேர்தலில் நிற்கப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறேன்’ என்றும் அப்போது அறிவித்தார். நடுநடுவே, சில விஷயங்கள் குறித்து, அறிக்கைகள் வெளியிட்டார்.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார் ரஜினி. இதையடுத்து இன்று 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி.

அந்த அறிக்கையில் ரஜினி தெரிவித்திருப்பதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலே எங்களின் இலக்கு. அப்போது தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை. தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான திட்டங்களை யார் வகுத்துச் செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். மேலும் இந்தத் தேர்தலில், என்னுடைய பெயரையோ, என்னுடைய புகைப்படத்தையோ, எங்களின் கொடியையோ யாரும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு ரஜினி, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x