Published : 15 Feb 2019 06:48 PM
Last Updated : 15 Feb 2019 06:48 PM
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 45 பேர் பலியானதையடுத்து உலகம் முழுதும் கண்டனங்களும் இரங்கல்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:
காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். போதும்.. நடந்தவரை போதும்..! இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
பலியான ஜவான்களின் குடும்பத்தினருகாக என் இருதயம் கலங்குகிறது. உலகைவிட்டுப் பிரிந்த தைரியமான அந்த இருதயங்கள்.. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு கூறினார் ரஜினிகாந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT