Published : 11 Feb 2019 04:13 PM
Last Updated : 11 Feb 2019 04:13 PM
புதுச்சேரியில் இன்று (பிப்ரவரி 11) முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் கட்டாயச் சட்டம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து மோதல் நிலவுகிறது.
இந்நிலையில் திடீரென்று சாலையில் ஆய்வில் இறங்கிய கிரண்பேடி ஒவ்வொருவரையும் நிறுத்து ஹெல்மெட் எங்கே, எத்தனை பேர் ஒரு வண்டியில் செல்வீர்கள்? 4 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றால் நால்வருமே கீழே விழுந்துவிடுவீர்கள் என்றெல்லாம் எச்சரித்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்த கிரண் பேடி, "புதுச்சேரியில் ஹெல்மெட் அணியும் கலாச்சாரமே இல்லை. ஒவ்வொரு முறை ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும்போதும் அதனை முதல்வரே தடுத்து விடுகிறார். இதனால், மூன்று நாளுக்கு ஒரு முறை ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் ஒருவர் பலியாகிறார். சட்டங்களை அமல்படுத்துவதிலிருக்கும் சவால்களுக்கு இடையேதான் இதனை நடத்த வேண்டியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, டிஜிபி சுந்தரி நந்தா புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்தார். இதனை மீறுபவர்கள் மீது முதல் முறை 100 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 300 ரூபாய் அபராதமும், மூன்றாவது முறையும் விதிகளை மீறுபவர்களுக்கு 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதேபோல் புதுச்சேரியில் கார்களில் செல்பவர்களும் வரும் இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT