Published : 03 Feb 2019 12:38 PM
Last Updated : 03 Feb 2019 12:38 PM

திருப்பதியில் 3 தங்கக் கிரீடங்கள் மாயம்: பக்தர்கள் அதிர்ச்சி; 6 தனிப்படை அமைப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ளது தெரிய வந்திருப்பது பக்தர்கள், அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவிந்தராஜ ஸ்வாமி கோயிலின் உற்சவ மூர்த்தியை அலங்கரிக்கும் 3 தங்கக் கிரீடங்கள் மாயமானது கோயில் அர்ச்சகர்கள் மூலம் அறியப்பட்டது. இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு வரவழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

மேலும், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் காணாமல் போன கிரீடத்தை கண்டு பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோவிந்தராஜ சாமி கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

திருப்பதியில் தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளது பக்தர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x