Published : 03 Feb 2019 08:53 AM
Last Updated : 03 Feb 2019 08:53 AM
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் கைது செய்யப்பட்டார். இவ்வழக் கில் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலை யில் வழக்கு விசாரணை திரு வில்லிப்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலாதேவி, ‘போலீஸார் என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கினர். நானாக வாக்குமூலம் அளிக்க வில்லை. தவறான வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்' என்றார்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவிக்கு நேற்று மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட் டது. அவரை போலீஸ் வேனில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மாத்திரை, மருந்துகள் அளிக்கப் பட்டு இசிஜி, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்து மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத் துச் சென்றனர். அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT