Published : 03 Feb 2019 08:30 AM
Last Updated : 03 Feb 2019 08:30 AM

தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. மேலும் ஈரப்பதம் மிகுந்த வடகிழக்கு திசைக் காற்றும் தமிழகம் நோக்கி வீசி வருகிறது. இவை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு இரவு நேரங்களில் உறைபனி நிலவக்கூடும்

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறைந்த அளவாக உதகையில் 3.9 டிகிரி, கொடைக்கானலில் 7 டிகிரி, குன்னூரில் 10 டிகிரி, வால்பாறையில் 10.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி யுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் அதிக அளவாக கன்னியாகுமரி, மதுரை, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 33 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x