Published : 23 Jan 2019 10:37 AM
Last Updated : 23 Jan 2019 10:37 AM

தலைமை செயலருக்கு அனுப்பிய குட்கா குறித்த கடித விவரம் தாக்கல் செய்ய வேண்டும்: வருமானவரி துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு தொடர்பாக டிஜிபி.க்கு அனுப்பிய கடித விவரம் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடித விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்ததாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், டிஜிபி ராஜேந்திர னுக்கு எதிரான வழக்கு நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்த போது குட்கா முறைகேடு தொடர் பாக வருமான வரித் துறை அனுப்பிய கடிதம் இல்லை என தலைமைச் செயலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த கடிதம் போயஸ் தோட்டத்தில் சசிகலாவின் அறையில் வருமான வரி சோதனையின்போது எடுக் கப்பட்டது. இதில் இருந்து குட்கா முறைகேடு தொடர்பாக வருமான வரித் துறை கடிதம் அனுப்பியது உறுதியாகி உள்ளது எனக் கூறப்பட்டி ருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு வருமான வரித் துறை சார்பில் கடிதம் அனுப் பியது மற்றும் அது தொடர்பான தகவல்களை வருமான வரித் துறை தாக்கல் செய்ய நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த போது, டிஜிபிக்கு அனுப்பிய கடித விவரங்களை மூடி முத்திரையிட்ட கவரில் வருமான வரித் துறை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குட்கா விவகாரம் தொடர்பாக தலைமைச் செயல ருக்கு கடிதம் அனுப்பிய விவரங் களை மூடி முத்திரையிட்ட கவரில் வருமான வரித் துறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜன.28-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x