Published : 23 Jan 2019 10:26 AM
Last Updated : 23 Jan 2019 10:26 AM

பிரிட்டனில் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது: இலங்கை தூதரகம் விளக்கம்

பிரிட்டனில் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடி யாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டனில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் கடந்த 4.2.2018 அன்று நடைபெற்றது. இதில் இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர் கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்நாட்டில் வாழும் தமிழர்கள் பலர் தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவப் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ, தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுத்து விடு வேன்’ என்பதுபோல சைகை காட்டி னார். இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கைத் தமிழர்கள், தூதரக அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தினர்.

இதனிடையே, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ சைகை காட்டிய வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியது. மேலும் அவரை பணி நீக்கம் செய்யக் கோரி பிரிட்டன் அரசுக்கு இலங்கை வம்சாவளி எம்பிக்கள் கடிதம் எழுதினர்.

தொடர்ந்து, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவை சஸ் பெண்ட் செய்து இலங்கை வெளி யுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டதுடன், அவர் மீது துறை ரீதியிலான விசாரணை மேற் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் பணி இடைநீக்கம் செய்யப் பட்ட பிரியங்க பெர்னாண்டோ வுக்கு இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன உத்தரவால், மீண்டும் இலங்கை வரவழைக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது.

கைது செய்ய உத்தரவு

இலங்கை அரசின் இந்த செயல் இலங்கை தமிழர்களையும், பிரிட்டனில் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், பிரிட்டனில் உள்ள இலங்கை வம்சாவளி எம்பிக்களும், அங்குள்ள தமிழர்களும் லண்டன் நீதிமன்றம் மூலம் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதி மன்றம் நேற்று முன்தினம் (ஜன.21) அன்று பிரியங்க பெர்னாண் டோவை கைது செய்ய அதிரடி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கான இலங்கை தூதரகம் வெளியிட் டுள்ள அறிக்கை: பிரியங்க பெர் னாண்டோ தற்போது பிரிட்டனில் வசிக்கவில்லை. மேலும் வியன்னா மாநாட்டு உடன்படிக்கையின் அடிப்படையில், வெளியுறவுத் துறை பணிகளுக்காக வந்த அதிகாரிக்கு எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடி யாது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கை உள் நாட்டு யுத்தத்தின்போது, அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிய பிரியங்க பெர்னாண்டோ பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x