Published : 23 Jan 2019 10:04 AM
Last Updated : 23 Jan 2019 10:04 AM

2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் மைக்ரோசாட் - ஆர், ‘கலாம்சாட்’ ஆகிய 2 செயற்கைக் கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்ட்-டவுன் இன்று தொடங்குகிறது.

புவி ஆய்வு மற்றும் கண்காணிப் புக்காக மைக்ரோசாட் - ஆர் என்ற இமேஜிங் செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் 690 கிலோ எடை கொண்டது. நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிப்பது இதன் முக்கிய பணியாகும். இதில் 3டி கேமராக்கள், லேசர் கருவிகள் உட்பட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த செயற்கைக்கோள் நாளை (24-ம் தேதி) இரவு 11.40 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்ட்-டவுன் இன்று தொடங்குகிறது.

இந்த செயற்கைக் கோளுடன் தமிழக மாணவர்கள் குழு தயாரித்துள்ள ‘கலாம்சாட்’ என்ற, உலகின் மிக குறைந்த எடையுள்ள (34 கிராம்) செயற்கைக் கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இரு வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக் கோள் கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதற்கேற்ப, ராக்கெட்டின் இறுதி கட்ட நிலையான பிஎஸ் 4 இன் ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில் முதல்முறையாக இந்தியா இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x