Published : 30 Dec 2018 08:52 AM
Last Updated : 30 Dec 2018 08:52 AM

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி: தமிழிசை

தமிழகத்தில் பாஜக தலைமை யில் வலுவான கூட்டணி அமை யும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பாஜக வலுப் பெற்று வருகிறது. பாஜக தலை மையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும். திமுகவை விட கொள்கை மற்றும் தொண் டர் பலத்துடன் கூடிய வலுவான கூட்டணியை பாஜக அமைக்கும். 2019 தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவில் அந்நிய முதலீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 38 ஆயிரம் பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு கிடைத்துள் ளது. மத்திய பாஜக அரசு சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.1.81 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில்தான் அதிகம் பேர் கடனுதவி பெற்றுள்ளனர்.

ஜன.5, 6-ல் 2,500 இடங்களில் பாஜக வாக்குச்சாவடி மாநாடு நடக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x