Published : 30 Dec 2018 08:41 AM
Last Updated : 30 Dec 2018 08:41 AM
கடலோர கர்நாடகப் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரண மாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
குமரிக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் நிலவிய இரு காற்று சுழற்சிகளும் வலுவிழந்துவிட்டன. கடலோர கர்நாடக பகுதியில் நிலவும் காற்று சுழற்சியால், கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி தமிழக பகுதியில் நிலவுகிறது.
அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செமீ, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, சங்கரன்கோவில் ஆகிய இடங் களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT