Published : 30 Dec 2018 08:33 AM
Last Updated : 30 Dec 2018 08:33 AM
புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இரவில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புத்தாண்டை முன்னிட்டு அசம் பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித் தும் போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆலோ சனை நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கூடுதல் கவனத்துடன் செயல்பட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் இரவு வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. உரிய அடை யாள அட்டை இல்லாமல் வருபவர் கள், சந்தேக நபர்கள் தீவிர விசா ரணைக்கு பிறகே அனுப்பப்படு கின்றனர். தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட வாகன சோதனையில் சந்தேக நபர்கள் 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT