Published : 16 Dec 2018 06:57 PM
Last Updated : 16 Dec 2018 06:57 PM

வரும் தேர்தலில் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் மாற்றத்தை உருவாக்குவார்கள்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலைத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது, இதில் பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியபோது,

 

தமிழுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி.

 

கருணாநிதியை எவ்வாறு கவுரவிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி. வருகின்ற தேர்தலில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் மாற்றத்தை உருவாக்குவார்கள்.

 

இவ்வாறு அவர் பேசினார். மேலும் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் சிறிய உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x