Published : 15 Dec 2018 09:38 AM
Last Updated : 15 Dec 2018 09:38 AM

கடற்கரை - தாம்பரம் தடத்தில் இன்றும், நாளையும் 9 மின்சார ரயில் சேவை ரத்து

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எழும்பூர் யார்டில் 15, 16 தேதிகளில் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 10, 11-ல் நடைமேம்பாலம் விரிவாக்க பணிகளும் நடக்க உள்ளன.

15-ம் தேதி தாம்பரம் - கடற்கரைக்கு இரவு 11.30 மணி மற்றும் கடற்கரை - தாம்பரத்துக்கு இரவு 11.05, இரவு 11.30, 11,59 ஆகிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். செங்கல்பட்டு - கடற்கரைக்கு இரவு 10.15, இரவு 11.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.

16-ம் தேதி கடற்கரை - தாம்பரத்துக்கு அதிகாலை 4.15 மற்றும் தாம்பரம் - கடற்கரைக்கு அதிகாலை 4.00, 4.20, 4.40, 5.15 மணி மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். கடற்கரை - செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.40, 5.00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x