Published : 15 Dec 2018 08:39 AM
Last Updated : 15 Dec 2018 08:39 AM

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர் எம்ஜிஆர் வெளிநாட்டில் பெற்ற சிகிச்சையுடன் ஒப்பிட்டு கேள்வி: சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

கடந்த 1984-ம் ஆண்டு எம்ஜிஆர் வெளிநாட்டில் பெற்ற சிகிச்சை அளிக்கப்பட்ட நிகழ்வுடன் ஒப்பிட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர் பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், போயஸ் கார்டனில் பணிபுரிந்து 3 பணிப் பெண்கள் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

விசாரணைக்கு பின் ஜெ.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலை 10.30 முதல் 2.30 வரை விசாரணை நடைபெற்றது. விசாரணை ஆணைய நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதிலை அளித்துள்ளேன். ஜெய லலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், அவரை வெளிநாடு அழைத்துச் செல்லாதது, 1984-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வை ஒப்பிடும் (எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டில் பெற்ற சிகிச்சை) கேள்விகள் எழுப்பப்பட் டன. அதற்கு உரிய பதிலை அளித் திருக்கிறேன். மீண்டும் என்னை 18-ம் தேதி அன்று விசாரணைக்கு அழைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:

இன்றைய விசாரணையில் சாட்சியம் அளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் நான் குறுக்கு விசாரணை நடத்தினேன். எனது பல்வேறு கேள்விகளுக்கு, “ஜெயலலிதாவுக்கு சரியான சிகிச்சை வழங்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த 2 மாத காலத்தில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சந்தேகம் எதுவும் எழுப்பவில்லை. இங்கு உலகத்தர சிகிச்சை அளிக்கப்படுவதால், வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலர் ஒப்புதலுடன், தான் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் அடிப்படையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வந்தது” என்று பதில் அளித்துள்ளார்.

இவ்வாறு ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x