Published : 13 Dec 2018 10:07 AM
Last Updated : 13 Dec 2018 10:07 AM
தஞ்சை பெரிய கோயில் வளாகத் தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற இருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. இதையடுத்து அந் நிகழ்ச்சி ரத்தானது. இது தொடர் பாக கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் தொடர்ந்த பொதுநல வழக்கு உயர் நீதிமன்ற கிளை யில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தொல்லி யல் துறையின் உதவி பாதுகாவலர் நேரில் ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள், பாரம் பரிய நினைவுச் சின்னமான தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் எதிர் காலத்தில் தனியார் நிகழ்ச்சிக ளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதே நீதிமன்றத்தின் நோக்கம் என்றனர்.
தொடர்ந்து, மத்திய அரசு வழக் கறிஞர் சுப்பையா வாதிடும்போது, 'தஞ்சை பெரிய கோயில் வளாகத் தில் பஜனை நிகழ்ச்சி நடத்த வாழும் கலை சார்பில் அனுமதி கோரப்பட் டது. நிகழ்ச்சிக்காக கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கவோ, எவ்வித கட்டுமானங்களோ மேற் கொள்ளக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனை களின் பேரில்தான் அந்நிகழ்ச்சிக்கு பேலஸ் தேவஸ்தானம் அனுமதி வழங்கியது' என்றார்.
இதையடுத்து, கட்டுமானங்க ளும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பஜனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தியான நிகழ்ச்சிக்காக நிபந்த னையை மீறி மேடை, பந்தல் அமைத்துள்ளனர். இதற்காக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது என நீதிபதிகள் கேட்டனர்.
பின்னர், இதுதொடர்பாக மத்திய தொல்லியல்துறை கண் காணிப்பாளர், தஞ்சை பேலஸ் தேவஸ்தான இணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் ஆவணங்களுடன் இன்று (டிச.13) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT